Friday, November 20, 2009
how to blog postin...
tutorial for Sara office.
how to blog postin...
tutorial for Sara office.
Labels: test
மூன்று பேர் இறந்த பிறகு சொர்க்கத்திற்குச் சென்றார்கள். கடவுள் அவர்களை "நீங்கள் மீண்டும் பூமியில் பிறந்தால் எப்படிப் பிறக்கவேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்?" என்று கேட்டார்.
முதலாமவன் சொன்னான். "இப்போது இருப்பதை விட 100 மடங்கு புத்திசாலியாகப் பிறக்க விரும்புகிறேன்". கடவுள் "அப்படியே ஆகட்டும்" என்றார்.
இரண்டாவது ஆள், 1000 மடங்கு புத்திசாலியாகப் பிறக்கவேண்டும் என்றான். கடவுளும் அதை நிறைவேற்றினார்.
மூன்றாவது ஆள் லட்சம் மடங்கு புத்திசாலியாகப் பிறக்க வேண்டும் என்றான்.
கடவுள் அவனைப் பெண்ணாகப் படைத்துவிட்டார்!!
Labels: நகைச்சுவை
அம்மா: "உனக்கு வெட்கமாயில்லை? உன்ஃப்ரனட் மேல இப்படிக் கல்லை வீசலாமா?"
மகன்: "முதல்ல அவன்தான் வீசினான். அப்புறமாத்தான் நான்...."
அம்மா: "நீ அப்படி செஞ்சுருக்கக்கூடாது. அவன் கல் எறிஞ்ச உடனே என் கிட்ட வந்து சொல்லியிருக்கனும்."
மகன்: "உன்னால என்ன செய்ய முடியும்? நான் உன்ன விட நல்லாக் குறிபார்த்து எறிவேனாக்கும்."
Labels: நகைச்சுவை
ராமு: "எனக்கு பயங்கரமா தலைவலிக்கிறது"
நித்யா: "எனக்குக் காரணம் தெரியும்!"
ராமு: "என்ன காரணம்?"
நித்யா: "நான் நேத்திக்கு வயத்து வலின்னு அம்மாகிட்ட சொன்னேன். அம்மா வயத்துல ஒன்னும் இல்லாததுதான் காரணமாயிருக்கும்னு சொன்னாள். உனக்கும் அப்படித்தான் இருக்கும்!"
Labels: நகைச்சுவை
ரயிலில் டி.டி.ஆர் கேட்டார்: என்னப்பா பழைய டிக்கெட்டை வச்சுக்கிட்டு பயணம் செய்யறே?
ஏன், இந்த ட்ரெயின் மட்டும் புதுசா என்ன?
Labels: நகைச்சுவை
முதல் திருடன்: அட! போலீஸ் வர்ற சத்தம் கேக்குது, சீக்கிரம் குதிச்சுடலாம், வா.
இரண்டாவது திருடன்: அதெப்படி முடியும்? நாம 13வது மாடிலே இருக்கோம்.
முதல் திருடன்: சீக்கிரம் குதி, இப்போ போய் மூட நம்பிக்கையெல்லாம் பார்த்துகிட்டு.
Labels: நகைச்சுவை
வானம் பொழிகிறது; பூமி விளைகிறது;
உனக்கு ஏன் அனுப்ப வேண்டும் எஸ்.எம்.எஸ்.
என்னோடு கடைக்கு வந்தாயா?
செல் வாங்கித் தந்தாயா?
ஓசி சிம்கார்டு கொடுத்தாயா?
பில் பணமாவது கட்டினாயா?
அல்லது உன்னோடு கொஞ்சி விளையாடும்
உன் அழகான கேர்ள் பிரண்ட்சுக்கு
என் நம்பரையாவது கொடுத்தாயா!!
மானங்கெட்டவனே!
யாரிடம் கேட்கிறாய் எஸ்.எம்.எஸ்.
எடு உன் செல்லை;
போடு அதைக் கீழே;
எடு ஒரு கல்லை;
கல்லைப் போட்டு நொறுக்கு உன் செல்லை.
Labels: நகைச் சுவை