Monday, April 13, 2009
சொர்க்கத்தின் வாயிலில், மனைவிக்குப் பயப்படும் ஆண்களை ஒரு வரிசையிலும் பயப்படாதவர்களை மறு வரிசையிலும் நிற்கச் சொன்னார் கடவுள்.
மனைவியிடம் பயப்படுபவர்கள் வரிசை மைல் கணக்கில் நீண்டிருக்க, பயப்படாதவர் வரிசையில் ஒரே ஒருவர் மட்டும் நின்றார்.
கடவுள் பயப்படுபவர்களைப் பார்த்து கடிந்துகொண்டுவிட்டு, தனியாக நின்ற அந்த தைரியசாலியிடம் கேட்டார்.
"எனக்கு உன்னைப் பார்க்க ரொம்பப் பெருமையாக இருக்கிறது. எப்படி நீ உன் மனைவியை அடக்கினாய்?"
அவன் சொன்னான், "எனக்குத் தெரியாது. என் மனைவிதான் என்னை இங்கே நிற்கச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள்."
0 comments:
Post a Comment